Home அரசியல் நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை சீரற்றதாக இருக்கிறது என்கின்றார் விராட் கோலி

நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை சீரற்றதாக இருக்கிறது என்கின்றார் விராட் கோலி

களத்தடுப்பு மோசமாக இருந்த காரணத்தினால்தான். நாங்கள் தோல்வியடைந்து வெற்றி வாய்ப்பை நழுவ விட்டோம் என இந்திய அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மொகாலியில் நேற்று அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற நான்காவது ஒருநாள் தொடரில் அடைந்த தோல்வி குறித்து கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், 

எங்களது களத்தடுப்பு மிகவும் மோசமாக இருந்தது. இதனால் நாங்கள் வெற்றி வாய்ப்பை தவற விட்டோம். அவுஸ்திரேலியா பேட்டிங் செய்யும் போது பனி பொழிவு முக்கிய பங்கு வகித்தது. 

பனி பொழிவு குறித்து இரண்டாவது முறையாக தவறாக கணித்து விட்டோம். இதனால் பந்து வீசுவது சவாலாக இருந்தது. பனி பொழிவு பந்து வீச்சை சேதப்படுத்தி விட்டது.

டர்னர் சிறப்பாக விளையாடி ஆட்டத்தின போக்கை மாற்றிவிட்டார். இதேபோல் ஹேண்ட்ஸ்கோம்ப், உஸ்மான் கவாஜாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த சேசிங்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

அத்துடன் இன்னும் கடினமாக உழைத்து அடுத்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற முயற்சிப்போம்.

நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை சீரற்றதாக இருக்கிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் டி.ஆர்.எஸ். பற்றி விவாதிக்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.