ராஜபக்ஸக்களுக்கு எதிரான சகல வழக்கு விசாரணைகளையும் முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் இணக்கம்

மகிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த நிதி மோசடிகள், கொலைகள் மற்றும் குற்றச் செயல்கள் சம்பந்தமான சகல வழக்கு விசாரணைகளையும் துரிதமாக முடிவுக்கு கொண்டு வர மகிந்த தரப்பு அரசாங்கம் இணக்கப்பாட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பேரில் இந்த நீதிமன்ற செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரவுள்ளதாக பேசப்படுகிறது. அத்துடன் இந்த விடயம் தொடர்பான மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் சில பொருட்களின் விலைகளை குறைக்கவும் எரிபொருள் விலை சூத்திரத்தை நீக்கி, இந்த செயற்பாடுகளுக்கு பாரிய ஊடக பிரசாரத்தை வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.