ஜனாதிபதிக்கெதிரான குற்றப் பிரேரணைக்காக கையொப்பங்கள் திரட்டப்பட்டு வருகின்றன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான குற்றப் பிரேரணைக்காக கையொப்பங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்தக் கையொப்பங்கள் திரட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சற்று நேரத்திற்கு முன்னதாக அலரி மாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளன.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் பிரதமராக நியமித்தமையை எதிர்த்தே பிரதானமாக குற்றப் பிரேரணை முன்வைக்கப்பட உள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.