ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஹுஸைன் பதவி விலகுவதாக அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிசெல் பாச்செலெட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 வெள்ளிக்கிழமை ஐ.நா. பொதுச் சபை கூடிய போது இந்த நியமனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராக உள்ள செய்யித் ராத் அல் ஹுஸைன் இந்த மாத இறுதியில் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.இதையடுத்தே ஹுஸைனின் பதவிக்கு சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிசெல் பாச்செலெட் நியமிக்கப்பட்டுள்ளார்