அரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க மஹிந்தவை அழைக்கும் மங்கள

அரச கடன் நிலைமை தொடர்பாகவும், கடன் சேவை குறித்தும் விவாதிக்க தன்னுடன் பகிரங்கமான விவாதத்திற்கு வருமாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டார் பக்கத்தில் விடுத்துள்ளார்.மகிந்த ராஜபக்ச முன்னாள் நிதியமைச்சர் என்பதன் காரணமாக தான் இந்த அழைப்பை விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிதியமைச்சராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர் என்பதால், யாரோ எழுதிக்கொடுக்கும் அறிக்கையை வெளியிடாது, அரச கடன் மற்றும் ஏனைய நிதி விவகாரங்கள் தொடர்பில் தன்னுடன் விவாதத்திற்கு வர வேண்டும் எனவும் மங்கள சமரவீர நேற்று ஊடக சந்திப்பிலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது