ஆளும் அரசாங்கத்திற்கு எவ்வாறான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும்  நாட்டை கட்டியெழுப்ப முடியாது

ஆளும் அரசாங்கத்திற்கு எவ்வாறான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும்  நாட்டை கட்டியெழுப்ப முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் தொழிலாளர் தலைவரான டி.பி.இளங்ககோனின் கொழும்பு – நவம் மாவத்தையில் அமைந்துள்ள உருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மே தின கூட்டத்திற்கு, அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.