ஜனாதிபதியிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அரசை விட்டு விலகிய சுதந்திரக் கட்சி அமைச்சர்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்களும் அரசாங்கத்தின் சகல பொறுப்புக்கள் பதவிகளிலிருந்தும் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ராஜாங்க அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினருமான லக்ஸ்மன் யாபா அபேவர்தன சற்று முன்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
 
 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அரசாங்கத்தை விட்டு விலகுவதற்கு ஜனாதிபதியிடம் அனுமதி பெற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது சுயகௌரவத்தை பாதுகாக்கும் வகையில், ஆதரவாக வாக்களித்ததாகத் தெரிவித்துள்ளார்.இதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வரும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.