ஒழுக்காற்று நடவடிக்கைகளினால் பி.அமைச்சர் ஹரீஸின் மக்களுக்கான குரலை அடக்கிவிட முடியாது

பிரதி அமைச்சர் ஹரீஸூக்கு எதிராக உயர்பீட கூட்டத்தில் இடம்பெற்ற ஒழுக்காற்று நடவடிக்கை விவகாரத்தை வைத்து கட்சியின் தலைமைக்கும்பிரதித் தலைவர் ஹரீஸிக்குமிடையில் விரிசலை ஏற்படுத்தி கட்சியினை பலவீனப்படுத்த எத்தனிப்பவர்கள் தங்களது போலிப்பிரச்சாரங்களைகைவிடுமாறு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் ஊடக செயலாளர் றியாத் ஏ. மஜீத் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில், முஸ்லிம்களுக்கெதிரான கண்டி வன்முறைச் சம்பவத்தின் போதுமுஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கத் தவறிய பிரதமரையும், அரசாங்கத்தையும் பிரதி அமைச்சர் ஹரீஸ் காட்டமாக விமர்ச்சித்திருந்தார். இந்த விமர்சனம் அரசாங்கத்துக்குள் அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது என சுற்றிகாட்டிய கட்சியின் முக்கிய உயர்பீட உறுப்பினர்கள் சிலர், பிரதிஅமைச்சர் ஹரீஸூக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினர். இந்த ஒழுக்காற்று நடவடிக்கையினைபெரும்பாலான  உயர்பீட உறுப்பினர்கள் எதிர்த்ததனால் அது அவ்விடத்திலேயே கைவிடப்பட்டது.

கட்சியின் உயர்பீட கூட்டத்தில் முடிவுற்ற ஒரு சம்பவத்தினை முகநூல்களிலும் இணையத்தளங்களிலும் ஊதி பெருக்க வைத்தமையானது பிரதிஅமைச்சருக்கும் கட்சிக்கும் கட்சித் தலைமைக்குமிடையிலுள்ள நல்லுறவில் விரிசலை ஏற்படுத்துவதற்கு எடுக்கின்ற முயற்சியாகவே இதனைபார்க்க வேண்டியுள்ளது.

உயர்பீட கூட்டத்தில் நடந்த சம்பவத்தை உயர்பீடத்தில் இல்லாத சகோதரர்கள் பிரதி அமைச்சருக்கு எதிராக யாரும் ஒழுக்காற்று நடவடிக்கைஎடுக்க சொல்லவில்லை என எழுதியிருப்பதானது உண்மைக்கு புறம்பான கவலை தருகின்ற விடயமாகும். சம்பவம் இடம்பெற்றது என்பது உண்மைஆனால் அது பெரும்பாலான உறுப்பினர்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது என்பதுதான் உண்மையான விடயமாகும்.

சமூகத்திற்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களுக்கு எதிராக பிரதி அமைச்சர் ஹரீஸ் குரல் கொடுக்கவும் களத்தில் நிற்கவும் தயங்காதவர். கண்டியில்முஸ்லிம்கள் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் தாக்கப்பட்ட நிலையில் அரசாங்கம் முஸ்லிம்களுக்குரிய பாதுகாப்பு விடயத்தில் கூடியகவனமெடுக்காததன் நிமித்தம் அதற்கான அழுத்தத்தினை அரசாங்கத்திற்கு கொடுப்பதற்காகவே பிரதி அமைச்சர் ஹரீஸ் பிரதமரைவிமர்சித்திருந்தார். இதில் யாரும் பிழை காண முடியாது.

எதிர்காலத்தில்  சமூகத்திற்கு இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படும் பட்சத்தில் இது போன்ற ஒழுக்காற்று நடவடிக்கைகளினால் பிரதி அமைச்சர்ஹரீஸின் மக்களுக்கான குரலை அடக்கிவிடவும் முடியாது.

2002ம் ஆண்டு காலப்பகுதி தொடக்கம் இன்று வரை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் பாதிப்புக்கள் வந்தபோதுபிரதி அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்ற பகிஷ்கரிப்பு முதல் பாராளுமன்ற சத்தியாக்கிரகம் வரை சமூகத்திற்காக தன்னை முழுயாக அற்பணித்து குரல்கொடுத்து போராடியதுடன் ஆட்சியாளர்களையும் கண்டித்து பேசிய ஒரு அரசியல் தலைமை என்பதை இன்றும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

பிரதி அமைச்சர் ஹரீஸூக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முனைந்ததையிட்டு கட்சியின் போராளிகள், நலன்விரும்பிகள், ஆதரவாளர்கள், சிவில் அமைப்புக்கள், குறிப்பாக இளைஞர்கள் தங்களது ஆதங்கத்தினை சமூக வளைத்தளங்கள் ஊடாக வெளியிட்டமை முஸ்லிம்சமூகம் அவர் மீது வைத்துள்ள பற்றை பறைசாற்றி நிற்கின்றது.

ஒழுக்காற்ற நடவடிக்கை விவகாரத்தினை கட்சிக்கு எதிரானவர்கள் பிழையான கோணத்தில் விமர்ச்சித்து கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் பிரதிஅமைச்சருக்கும் முரண்பாடு தோன்றியுள்ளது என மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முற்பட்டடுள்ளனர். இந்நடவடிக்கையினால் பிரதிஅமைச்சர் கட்சியுடனோ, கட்சித் தலைமையுடனோ முரண்படப் போவதில்லை என்பதை மிகத் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

பிரதித் அமைச்சர் ஹரீஸ் கட்சியுடன் கூடிய அபிமானம்; கொண்டவர். கட்சியின் பிரதித் தலைவர் என்ற வகையில் கட்சியின் வளர்ச்சிநடவடிக்கைகளில் வழமை போன்று செயற்பட்டு வருகின்றார். சிலர் கூறுவது போன்று அவர் கட்சியை விட்டு ஒதுங்கி இருக்கவில்லை என்பதையும்ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

கண்டி இன வன்முறைச் சம்பவம் நடைபெற்று அதன் வடு மக்கள் மத்தியில் மாறாத நிலையில் பிரதி அமைச்சர் ஹரீஸ் மீதான ஒழுக்காற்றுநடவடிக்கை விவகாரத்தை தூக்கிப்பிடித்து விமர்சிப்பதை இத்துடன் நிறுத்திவிட்டு எமது சமூகத்திற்கு இன்று ஏற்பட்டுள்ள சவால்களை முறியடிக்கசகலரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவாகும்.

மேலும் பிரதி அமைச்சர் ஹரீஸின் விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு கட்சியின் வளர்ச்சிக்கும் எதிர்கால நடவடிக்கைகளுக்கும், சமூகநலன் விடயத்திலும் சகலரும் ஒன்றிணைந்த செயற்பட முன்வர வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.