இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமீத் ரம்புக்வெல பிணையில் விடுவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமீத் ரம்புக்வெலவை 5 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான் ரங்க கலன்சூரிய இன்று உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் நாவல- நாரஹேன்பிட்டிய பகுதியில் வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது வாகனத்தை மோதி விபத்துக்குள்ளாக்கியமைத் தொடர்பில் ரமீத் ரம்புக்வெல கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 9 ஆம் திகதி இரவு குறித்த விபத்து சம்பவம் நாவல பகுதியில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், ரமீத் ரம்புக்வெலவின் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் விசாரணைக்கு எடுத்துக்​கொள்ளப்படவுள்ளது. இதேவேளை,

ரமீத் ரம்புக்வெல முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.