இனந்தெரியாத நபர்களால்  அம்பாரை பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது… ?

 

 அம்பாரை நகரிலுள்ள பள்ளிவாசல் இன்று  நள்ளிரவு (27.02.18) இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக  அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய lankafrontnews இணையத்தளம் அம்பாறையிலுள்ள ஒரு சகோதரரை தொடர்பு கொண்ட போது,

இச்சம்பவம் உண்மை எனவும், பள்ளிவாசலின் கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் ,மக்கள் அச்சத்துடன் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க முன்வருமாறும், அச்சத்திற்குள்ளாகியுள்ள மக்களை பாதுகாப்பது மக்கள் தலைவர்களின் கடமையாகும் எனவும் மேலும் தெரிவித்தார் .

அல்லாஹ்வினுடைய இல்லத்தையும், அங்கு வாழும் மக்களையும் பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்.