ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகிக்கொண்டதாக இதுவரையில் தமக்கு அறிவிக்கப்படவில்லை : சபாநாயகர்

தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகிக்கொண்டதாக இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
 தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுத்திர கட்சி விலகிக்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன சபாநாயகரிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.
 இதற்கு பதிலளித்து பேசிய சபாநாயகர், அவ்வாறான தகவல்கள் எதுவும் இதுவரையில் தமக்கு உத்தியோபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என கூறியுள்ளார்.