புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி தீர்மானம்

திர்வரும் புதன்கிழமை அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டில் நிலவும் அரசியல் சிக்கலை தீர்த்து கொண்ட பின்னர், புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
 தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்குமாயின் அமைச்சரவை மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது.அமைச்சர்களின் துறைகளில் மாத்திரம் மாற்றங்கள் செய்யப்படும். 
 தேசிய அரசாங்கம் அல்லாத சந்தர்ப்பத்தில் அமைச்சரவையின் எண்ணிக்கை 30 ஆக குறைக்கப்பட்டு, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆக இருக்க வேண்டும் என 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.