தேர்தலில் தெரிவான உறுப்பினர்களின் பெயர்விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு கூடிய விரைவில்..!

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தெரிவான உறுப்பினர்களின் பெயர்விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் (பெண் தெரிவுசெய்ப்பட்டனர்) பெயர்களை கட்சி செயலாளர்கள் அனுப்பிவைக்கும் பட்சத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தேர்தல் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதற்கு வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதில் மாகாணசபைகள் உள்ளுராட்சிமன்ற அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவிப்பை எதிர்வரும் மார்ச் மாதம் முதல்வாரத்தில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று அமைச்சின் செயலாளர் கமல்பத்மஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இது தேர்தல் ஆணைக்குழுவிடம் இருந்து கிடைக்கப்பெறும் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளின் வர்த்தமானி அறிவிப்பின் பின்னரே என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.