உங்களது தலைப்பாகை “தம்பிரான் ” புண்ணியத்தில் களற்றப்படும் – பஷீர்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவடைந்த சில நாட்களில் இடம் பெறும் அமைச்சரவை மாற்றத்தில் உங்களுக்கு தொழில் அமைச்சு வழங்கப்படலாம். உங்களது வாக்குப் பலம் கிழக்கில் அரைவாசியாகக் குறையும். இது ஐ.தே.கட்சியால் கவனிக்கப்பட்டு உங்களது அந்தஸ்த்து கீழிறங்கும். இதனால் நீங்கள், உச்சபீட உறுப்பினர்கள் முக்கால்வாசிப் பேருக்கு வழங்கியிருக்கும் இணைப்பாளர் பதவிகளும் ஏனைய உயர் பதவிகளும் பறிபோகும். தற்போதைய அமைச்சினூடாக வரும் பெரும் வருமானம் தொலைந்து போகும். இன்று உங்களோடிருக்கும் கிழக்கைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பலர் உங்களைத் துறந்து விடுவர். அவர்களுக்குள் இருப்பவற்றைத் திறந்தும் விடுவர்.

நீங்கள் ரணிலோடு சண்டையிடுவீர்கள்.அக்கட்சியிடம் இருக்கும் உங்களைப் பற்றிய இரகசியங்களைக் காட்டி உங்களை மிரட்டுவார்கள். நீங்கள் ஆடாமலே அடங்கிவிடுவீர்கள்.உங்களைக் காப்பாற்றுவதற்கு ஏறாவூர் வித்துவானும் இப்போது உங்களோடு இல்லை.

ரணில் இலாப நட்டக் கணக்குப் பார்த்து கூட்டணிக் கட்சி அரசியல் செய்கிற அரசியல் கட்சித் தலைவர் என்பதை அப்போது புரிந்து கொள்வீர்கள்.

நசீருடைய பெயர் நாடாளுமன்ற உறுப்பினராக கெசட் பண்ணப்படுகிறதோ இல்லையோ, உங்களது தலைப்பாகை “தம்பிரான் ” புண்ணியத்தில் களற்றப்படும்.

இது, ஏறாவூர் வித்துவானின் இன்னுமொரு கணிப்பீடாகும்.

ஏறாவூர் வித்துவான் நீண்ட காலமாக எழுதித் தந்தவற்றையெல்லாம் வாசித்ததும் அவரின் வீட்டில் கிடவான் கிடையாகக் கிடந்து அரசியல் கலந்தாலோசனை செய்ததும் ஒன்றும் புரியாமல்தானா தலைவரே!)

BASHEER CEGU SAWOOD

FORMER MINISTER