நுவரெலியா மக்கள் போன்று சாய்ந்தமருது மக்களும் உள்ளுராட்சி சபையினை பெற வேண்டும் :இராதாகிருஷ்ணன்

file imgae

“நுவரெலியா மாவட்டத்தில் நாங்கள் எவ்வாறு மேலதிக உள்ளூராட்சி மன்றங்களைப் பெற்றோமோ அதே போன்று சாய்ந்தமருது மக்களும் பெற வேண்டும். இதுவே எமது நிலைப்பாடாகும்” என கல்வி ராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

file imgae

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சாய்ந்தமருது முஸ்லிம் மக்களின் தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை நியாயமானது. அதனை அவர்களுக்கு வழங்கியே ஆக வேண்டும்.

அங்குள்ள தலைமைகள் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தி சாய்ந்தமருது மக்களின் கோரிகைக்கையை நிறைவேற்றி வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்களுக்காக, எங்கள் நியாயத்தைப் புரிந்து குரல் கொடுக்கும் உங்களுக்கு எனது நன்றிகள் கௌரவ இராஜாங்க அமைச்சரே! இறைவன் உதவியுடனும் உங்கள் போன்ற அரசியல்வாதிகளின் ஆசியுடனும் எமக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை விரைவாகப் பெற்றே தீருவோம்!

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்