இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஆஷஸ் டெஸ்ட் போட்டிகள் பகல் இரவுப் போட்டியாக நடைபெறாது

2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரின் போது, எந்த ஒரு டெஸ்ட் போட்டியும் பகல் இரவுப் போட்டியாக நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கட் சபையின் நிறைவேற்றாளர் தொம் ஹரிசன் இதனைத் தெரிவித்துள்ளார்.ஆஷஸ் தொடரின் டெஸ்ட் போட்டிகளை பகல் இரவு போட்டிகளாக நடத்துவதன் ஊடாக, மைதானத்துக்கான நேரடி பார்வையாளர்களையும், தொலைக்காட்சி பார்வையாளர்களையும் அதிக அளவில் ஈர்க்க முடியும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இங்கிலாந்து கிரிக்கட் சபை பகல் இரவு டெஸ்ட் போட்டிகளை ஆஷஸ் தொடரில் இணைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டநாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

இன்றையதினம் இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 2 விக்கட்டுகளை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்ட நேரம் நிறைவடைந்தது. அவுஸ்திரேலிய முன்னதாக முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி 327 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.