நாளை முதல் நடமாடும் சேவை மூலம் அத்தியாவசியப்பொருட்கள் விற்பனை- அமைச்சர் றிஷாட் பணிப்புரை 

 

அமைச்சின் ஊடகப்பிரிவு

 

வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அறிவுறுத்தலுக்குகிணங்க கூட்டுறவு மொத்த விற்பனைநிலையம் (cwe) நாளை  முதல் ( 22/10/201) லொறிகள் முலம் அத்தியாவசிய பொருட்களின் விற்பனை நடமாடும் சேவையை ஆரம்பிக்கிறது 

வியாங்கொட. மினுவாங்கொட. கம்பஹா  ராகம கனேமுல்லை. மருதானை. ஹோமகம, கிரிபத்கொட தெல்கந்த  ஆகிய இடங்களில் முதற்கட்டமாக நடாத்தப்படும் இந்த நடமாடும் விற்பனை சேவையை எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தின் தலைவர் றிஸ்வான் தெரிவித்தார்.