தனுஷ்க குணதிலகவிற்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சிலால் போட்டித் தடையும், அபராதமும் !

 

இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு சர்வதேச கிரிக்கட் கவுன்சிலால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த ஆறு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் இந்தியாவுடன் இடம்பெற்ற போட்டியின் போது ஒழுக்க விதிகளை மீறிய குற்றத்திற்காகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி தனுஷ்க குணதிலகவின் ஆண்டுக்கான ஒப்பந்த வருமானத்தின் 20 வீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.