சித்திரவதைக் கூடம் இருந்ததை நல்லாட்சி அரசாங்கமும் மூடி மறைக்கின்றது :சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

 

திருகோணமலை கடற்படைத் தளத்தில் கோட்டா முகாம் என்ற பெயரில் சித்திரவதைக்கூடம் காணப்பட்டமை குறித்து 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தான் தெரிவித்த போது அதனை அப்போதிருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மறுத்ததாக சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,

இதனை தற்போதைய மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கமும் மூடிமறைத்து வருவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

தியாகதீபம் திலீபனின் 30 ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு யாழப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள நினைவிடத்தில் இன்று இடம்பெற்றது.

இதில் அஞ்சலி உரையாற்றும்போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.