தேர்தல் அறிவிக்கப்பட்டதும் கூட்டு எதிர் கட்சியில் மேலும் சில ஆளும் கட்சியினர் இணையவுள்ளதாக பந்துல குணவர்தனே தெரிவிப்பு

தேர்தல் காலம் நெருங்கும் போது ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு எதிர் கட்சியில் இணைந்து கொள்வர் என பந்துல குணவர்தனே தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ அண்மையில் நாடாளுமன்றில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டார்.

இது குறித்து கருத்து வெளியிடும் போதே பந்துல குணவர்தனே கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர்,

ஸ்ரீலங்கா சுதந்திர காட்சியைச் சேர்ந்த சிலர் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளதாகவும் ; தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டு எதிர் கட்சியில் இணையவுள்ளதாகவும் தெரிவித்தார்.