தவம் “கோட்சே” ஆகி, அதாஉல்லாவை “மகாத்மா” வாக்கி விட்டார்

 முல்லக்காரன்
 
 அண்மையில் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்தி மழையோடு குடைபிடித்த கூட்டம் எல்லோரது கவனத்தையும் ஈர்ந்துள்ளது. 
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.தவம் அவர்கள் ஆற்றிய உரை கல் நெஞ்சு படைத்தவர்களின் உள்ளங்களையும் கரைய வைத்திருக்கும்.
 
 
அதில் முக்கியமானது அதாஉல்லா நீண்டகாலமாக நோயாளியாக இருப்பவர்.அவருடை நோய்க்குப் பாவிக்கும் குளிசைகள் அவரைப் பைத்தியமாக்கி விட்டது.அவருக்கு என்ன பேசுவது என்பதே புரிவதில்லை என்று மிக ஆக்ரோஷமாகக் கூறினார்.அடுத்த விடயம் அவர் ஒரு பைத்தியக்காறன் என்றும், ஊழல் வாதி என்றும் கூறினார்.
 
 
முதலில் அதாஉல்லா ஊழல்வாதி என்றால் எல்லாக் கூட்டங்களிலும் ரணிலை விமர்சித்தும், தேர்தல் முடிந்து 2 வருடங்கள் கழிந்த நிலையில் மஹிந்தவையும் அவரது குடும்பத்தவரையும் ஏனைய பிரமுகர்களையும் விசாரணை செய்யும் நிதிமோசடிப் பிரிவு அதாஉல்லா மீது ஏன் வழக்குத் தொடரவில்லை? 
 
அரசியல் ரீதியாக ஹக்கீமுக்குப் பகையாளியான அதாஉல்லாவை ஏன் காட்டிக் கொடுத்து தண்டனை பெற்றுக் கொடுத்து வாக்குரிமையையும் பறிக்கவில்லை.
 
 
தவம் அவர்களே,  நீங்கள் உங்கள் தலைவரை வைத்துக் கொண்டு தானே இதையெல்லாம் கூறினீர்கள். அதாஉல்லா ஊழல்வாதி என்றால் நீங்கள் சும்மா விடுவீர்களா?
 
உங்கள் தலைவர் ஹக்கீமைப் போல் நீங்களும் மக்களை ஏமாற்றுகின்றீர்கள் என்பதற்கு மக்களே சாட்சி. நமதூர் சாதாரண மக்களுக்கே கொழும்பில் விலை உயர்ந்த வீடுகள் இருக்கின்றன.16வருட அரசியலில் எம்.பியாக, அரை மந்திரியாக ,மந்திரியதாக, அமைச்சரவை மந்திரியாக இருந்த ஒருவருக்கு வளவுத் துண்டொன்று இருப்பதில் என்ன ஆச்சரியம்.லங்கா ஹொஸ்பிட்டல், நாரேஹன்பிட்டயில் உள்ள வளவை அதாஉல்லா தொட்டம காட்டுக்குள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கின்றாரா?
 
 
சாதாரண இருமல் தடிமலுக்கு போடுகின்ற ஒரு குளிசையே உடம்பை சில மணி நேரம் ஆட்டுவிக்குது என்பதை நீங்கள் அறியவில்லையா?
 
உங்களுடைய தந்தை மிகவும் கண்ணியமானவர்.எப்போதும் மக்களோடு சிரித்த முகத்தோடு பேசுவார்.அப்படிப்பட்ட ஒருவரின் மகன் நன்றி கெட்ட தனமாக எங்கள் மத்தியில் உலா வருவதையிட்டு நாம் கவலை அடைகின்றோம்.
 
‘சட்டியிலிருப்பது அகப்பையிலே புத்தியிலிருப்பது வார்த்தையிலே’  என்ற சந்திர பாபுவின் பாடல் வரிகளுக்கேற்ப மக்கள் மத்தியில் நெறிதவறிப் பேசுவதைநிறுத்திக் கொள்ள முற்படுங்கள்.
 
பல்கலைக்கழக மாணவனாக இருந்து மாணவர்களை உசுப்பேற்றி தலையில் கறுப்புப் பட்டி அணிந்து பிரகடனம் என்ற போர்வையில் நீங்கள் போட்ட நாடகம் எல்லோரும் அறிந்ததே.
1.  இந்த நாடகத்தில் பங்கெடுத்து கல்முனை மைதானத்தில் தலைமை தாங்கிய ஹனிபா மௌலவிக்கு நீங்களும் உங்கள் சண்டியன்மாரும் சேர்ந்து செய்த அநியாயம் ஞாபகமிருக்கிறதா? நீங்கள் மௌலவிக்கு நன்றியுடையடையவராக இருந்திருக்க வேண்டுமே?
 
 
2.  ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த இப்தார் வைபவ கஞ்சிப் பானைக்குள் மண் அள்ளிப் போட்ட” ஹூக்கும்” கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஹனீபா மௌலவியின் கண்ணெதிரே  நீங்கள் அடிபட்டுக் கொண்டு கன்னம் வீங்கி இருப்பு அடிபட்டு நொந்து நடக்க முடியாமல் சிறைக் கைதியாக ஊர் மக்கள் வைத்திருந்ததை ஞாபகத்தில் வைத்துள்ளீர்களா?
 
 
3. முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸடீன் உங்களுக்குச் செய்த உதவிகளையும் அரசியல் பாடங்களையும் மறந்து அவரை நீங்கள் தூசித்த நன்றி கெட்ட தனத்தை என்னவென்று சொல்வது.
 
 
4. உங்களின் எண்ணற்ற அரசியற் கனவு மூட்டைகளுடன் அதாஉல்லாவிடம் தஞ்சமடைய ஊரூக்குத் தலைவனாக்கி (தவிசாளர்) அழகு பார்த்தவனைப் பார்த்து பைத்தியம் என்று கூறிய வார்த்தை நிச்சயம் வானங்கள் பலதைக் கடந்திருக்கும்.
 
 
அகில இந்திய காங்கிரஸ் தலைவராகி இந்தியாவின் பிரதமர் பதவியை பாரம் எடுக்கும்படி காங்கிரஸார் கூறிய போது ஐயோ! எனக்கு வேண்டாம் நான் 04ஆம் கிளாஸ் கூடப் படிக்காதவன் என்ற கர்ம வீரர் காமராஜர் கூட 1967ஆம் ஆண்டு நடை பெற்ற தமிழ் நாடு சட்ட சபைத் தேர்தலில் சாதாரண கல்லூரி மாணவனிடம் தோல்வி கண்டவர்.
 
 
நமது நாட்டில் ஜே.ஆர்.ஜெயவர்தன,என்.எம்.பெரெரா,கொல்வின் .ஆர்.டீ.சில்வா,பீற்றர் கெனமன்,ஆர்.பிரேமதாஸ,சீ.பிடி சில்வா ஏன் மட்டக்களப்பில் பதியுத்தீன் கூடப் பாராளுமன்றத் தேர்தலில் தோற்றவர்கள் பிற்காலத்தில் ஜே.ஆர்.ஜெயவர்தன, ஆர்.பிரேமதாஸ போன்றவர்கள் ஜனாதிபதி ஆனவர்கள்.  அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்.
 
 
பெருந்தலைவரின் மரணத்தின் பின் ஹக்கீமை துப்பாக்கி வேட்டுக் களத்துக்கு மத்தியில் இணைத்தலைவனாக்கி சாய்ந்தமருது பிரதேச செயலக திறப்பு விழாவின் போது மர்ஹூம் தொப்பி மொஹிதீனையும் மேடைமுன் கொண்டு வந்து தலைவனாக்கிய பெருமை அதாஉல்லாவைச் சாரும்.
 
 
அதாஉல்லாவின் முயற்சியினால் திருமலையில் பாயிஸ், சம்மாந்துறையில் அமீர், மருதமுனையில் துல்ஸான், நிந்தவூரில் ஆரிப் சம்சுடீன்,அட்டாளைச் சேனையில் உதுமாலெப்பை இவர்களில் கிழக்கு மாகாண சபையில் அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளை வகித்த உதுமாலெப்பையைத் தவிர மற்ற அனைவரும் அதாஉல்லாவைக் கைவிட்டவர்கள். மேலே சொன்னவர்களில் யாருமே அதாஉல்லாவைக் கௌரவக் குறைவாகப் பேசியதில்லை.படித்தவர்கள், கூடம் தெரிந்தவர்கள் மக்கள் முன் எதைப் பேச வேண்டுமென்று அறிந்து தெரிந்து பேசுபவர்கள்.
 
 
“தோட்டத்துல சுரக்கொடி நிலத்துல படர்ந்து விசாலமாகப் பரவி பெரிய பெரிய காய்களைப் போட்டிருக்கும்.அது நாளும் பொழுதும் ஒய்யாரமாகத் தோட்டத்து மண்ணுல முற்றிப் பழுக்கும் வரை கிடக்கும்.சுரக்காய் பார்த்து பந்தல்ல படர்ந்த கொடியில இருக்கிற புடலங்கா நீண்டு சுரக்காயக் குத்துறாப் போல வரும்.சுரக்கா சொல்லும் ஏய் புடலங்கா முட்டாள் தனமாக கீழ் நோக்கி வராத ஏனென்டா ஒன்ட வளர்ச்சி அவ்வளவு தான் என்று சந்தைக்கு கொடுத்துடுவாங்க என்று சொல்லும்.சில நாட்கள் கடந்த பின்  தோட்டத்துக்கு மரக்கரி வாங்க வந்தவன் நீண்ட புடலங்காயில கண்போக தோட்டக்காரனிடம் அத பறித்தெடுத்துட்டான்”.இப்ப புடலங்கா சொப்பிங் பேக்ல துண்டு துண்டாகப் போகுது.இதத்தான் சொல்ற பிஞ்சுல நெடுத்தது என்று (பிஞ்சுல பழுத்தம் இருக்கு) 
 
 
காந்தியைச் சுட்டால் நாம் வரலாற்றில் மக்களால் போற்றப்படுவோம் என்று நாதிராம் கோட்சே எண்ணியதால் தனது தலைவன் காந்தியைச் சுட்டான்.முடிவு காந்தி மகாத்மாவானார்.கோட்சே தூக்குக் கயிற்றில் தொங்கினார்.
அட்டாளைச்சேனை சந்தையில் அதாஉல்லாவை அவமானப்படுத்திப் பேசியதால் அந்த மக்கள் அதா மீது அனுதாபத்தைத் தெரிவிக்கின்றனர்.(இது எனது கருத்தல்ல அந்த ஊர் நண்பர்கள் சிலர் என்னிடம் கூறியவை.
 
 
அடுத்து அதாஉல்லாவில் குறைகள் இருக்கட்டும்.ஏன் உங்களிடமும் உங்கள் தலைவனிடமும் குறைகள் இல்லையா? அதற்காக அக்கரைப்பற்று மக்கள் அவருக்கு முட்செருப்பு மாட்டி சிலுவையை தூக்கி வரச் சொல்லமாட்டார்கள்.
 
 
அதாஉல்லா நெடுஞ்சாலைககள் அமைச்சராக இருந்து ஆற்றிய பணிகள் இஞ்கு ஒரு பிராந்தியக் காரியாலயம்,நூற்றுக்கணக்கானவர்களுக்குத் தொழில்வாய்ப்பு.நீர்வழங்கல் வடிகால் அமைச்சராக இருந்து அக்கரைப்பற்றில் ஒரு பிராந்திய நிலையம், நூற்றுக்கணக்கானவர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைத்தது.இங்குள்ள விடுதி மட்டும் உங்களுக்கும் உங்கள் தலைவருகும் அவசியத் தேவை.
உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சர் அக்கரைப்பற்றில் மேலதிகமாக மாநகர சபை,ஊழியர்ககள் இவ்வாறு அடிக்குக் கொண்ட போக ஆயிரம் விடயங்கள் இருக்கின்றன.
 
 
அக்கரைப்பற்று மத்திய கல்லூரிக்கு வந்த ஒரு அமைச்சின் செயலாளர் கூறினார்.’அக்கரைப்பற்றுக்குள் நுழையும் போது முகலாய சக்கரவர்த்திகள் ஆண்ட பாரத தேசத்தில் நிற்கின்றேனோ என்று எண்ணியதாகக் கூறினார்.
தம் அவர்களே! இன்னும் பல மேடைகள் ஏறுங்கள்.உங்கள் தூற்றுதலை மக்களிடம் அள்ளி வீசுங்கள்.
 
 
கோட்சேயின் தம்பியாக மட்டும் மாறிவிடாதீர்கள்.ஏனெனில் அதாஉல்லா மகாத்மாவாகப் போய்விடுவார்.
 
 
எங்கள் மண்ணை அயல் ஊர்களில் வீசாதீர்கள் அது அவர்களின் கண்களைக் கரிக்கும்.
முடியுமானால் அக்கரைப்பற்று மண்ணில் உள்ளூராட்சித் தேர்தலில் ஏதாவது ஒரு வட்டாரத்தில் போட்டியிட்டுப் பாருங்கள் வெற்றி பெற்றால் அது உங்கள் சாதனை.
அதா உல்லா உங்கள் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பார்.
 
 
தவம் அவர்களே! நீங்கள் எல்லாம் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபுக்குக் கல்லெறிந்து கொண்டிருந்த காலத்தில் அக்கரைப்பற்று பழைய யூனியன் முன்றலில் நடைபெற்ற கூட்டமொன்றில் ‘எனது பெரிய மனக்குறை ஒன்று தீர்ந்துவிட்டது.இனி நான் நிம்மதி அடையலாம் ‘அந்த அளவுக்கு என் எண்ணப் பதிவுகள், நனவுகள் எல்லாம் அதாஉல்லாவின் உள்ளக் கிடங்கில் குவிந்து கிடக்கின்றன. என்ற பொருள்பட அவர் கூறிய வார்த்தைகளும் அஷ்ரஃபால் புடம் போடப்பட்டவர் என்பதை நிரூபிக்கும்.இதை ஹக்கீம் கூட நன்கு உணர்வார் சிலர் காங்கிரஸ் தொண்டர்கள் சமைத்த புரியாணி கிடாரத்தில் அடிச்சட்டியைச் சுரண்டித் திண்ண அரசியல் பரதேசிகள் என்பதையும் அனைவரும் அறிவர்.
 
 
மர்ஹூம்களான சேர் ராசிக் பரீட் இலங்கை சோனகர் சங்கத்தை நிறுவினார்.டாக்டர் எம்.சீ.எம்.கலீல் முஸ்லிம் லீக் என்ற அமைப்பின் மூலம் பணி செய்தார். பாக்கீர்மாக்கார் முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அமைப்பைத் தோற்றுவித்தார்.எம்.எச்.மொஹம்மட்  ‘ராபியதுல் ஆலம் ‘ உலக முஸ்லிம்களின் அமைப்பின் இலங்கைப் பிரதிநிதியாக இருந்து அதிகமதிகம் சேவை செய்தார்.கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் இஸ்லாமிய சோசலிச முன்னணி என்ற அமைப்பை ஆரம்பித்து நாடு பூராவும் பணி செய்தார்.
 
 
இவர்கள் வாழ்ந்த ஊர்களில் குடியிருந்த இடங்களில் சுற்று வட்டாரத்தில் ஐயாயிரம் முஸ்லிம்கள் கூட வாழ்ந்திருக்கமாட்டார்கள். அப்படி இருக்க பொத்துவில் தொடக்கம் புல்மோட்டை வரை நீங்கள் நீங்கள் உட்பட மக்களுக்காக அரசியல் செய்து கொண்டிருக்கும் அதாஉல்லா மட்டும் இவருக்கு கசந்து போய் சவக்காலைகள் ஞாபகம் வந்ததும் அந்த சவக்காலை எல்லைக்குள் இருக்கும் அக்கரைப்பற்றில் பிரதேச தவிசாளராகவும், மாநகர  சபை உறுப்பினராகவும் பதவி வகிக்கத் தகுதி பெற்றது தேசிய காங்கிரஸ் மூலம் தான் என்பதை நினைத்தால் அட்டாளைச்சேனையில் எடுத்த வாந்தியை மீண்டும் தொண்டைக்குள் அள்ளிக் கொள்வார்.
 
 
சிறுநீத்தை வட்டைக்குள் விவசாயிகளிடம் சோறு வாங்கிச் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்ட கையோடு அன்னமிட்டவன் நெஞ்சிலே ஏ.கே.47 மூலம் குண்டு பாய்ச்சிய பயங்கரவாதியைவிட அதாஉல்லா பற்றி நன்றி மறந்து பேசும் நீங்கள் மிகக் கொடுமையானவர் .இதைத்தான் சொல்வது வளர்த்த கிடா மார்பில் பாய்கிறது.இனி அதாஉல்லா கிடாவைக் கட்டுல போட்டுவிடுவார் போலும்.