அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கையொப்பமிடப்பட்டுள்ளது. 

கூட்டு எதிர்க்கட்சியின் 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர். 

இவ்வாறு கையொப்பமிடப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று பகல் சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

சய்டம் தொடர்பான பிரச்சினையில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் சரியான முறையில் செயல்பட முடியாதுள்ளதாக கூறியெ இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.