அப்ரிடிக்கு தனது துடுப்புமட்டையை வழங்கிய கோலி

இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தான் கையெழுத்திட்ட பேட்டை நன்கொடையாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடியின் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி பரம எதிரிகளுக்கு இடையிலான மோதல் என்று வர்ணிக்கப்படும். மைதானத்திற்குள்ளேயும், வெளியேயும் வீரர்களும் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். இந்திய ரசிகர்களும், பாகிஸ்தான் ரசிகர்களும் அந்த கண்ணோட்டத்தில்தான் போட்டியை ரசிப்பார்கள்.