இலங்கையில் 6 லட்சம் பேர் போதைப்பொருளை பயன்படுத்துகின்றனர்

இலங்கையில் 6 லட்சம் பேர் போதைப்பொருளை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதிகளவானோர் ஹெரோய்ன் போதைப்பொருளை பயன்படுத்துவதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு தேசிய நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவை சுமார் 2 லட்சம் பேர் வரை பயன்படுத்துகின்றனர்.

இதனை கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து இலங்கையின் ஊடாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று கமகே ஆலோசனை வழங்கியுள்ளார்.