சமிந்த எரங்கவின் பந்து வீச்சு முறையில் தவறில்லை – சர்வதேச கிரிக்கட் வாரியம் உறுதி

 

இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் சமிந்த எரங்கவின் பந்து வீச்சு முறையில் தவறில்லை என்று சர்வதேச கிரிக்கட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. 


கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியின் போது அவரின் பந்து வீச்சு முறை ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இல்லை என்று கூறப்பட்டது. 

எவ்வாறாயினும் சமிந்த எரங்கவின் பந்து வீச்சு முறை தொடர்பில் சர்வதேச கிரிக்கட் வாரியத்தால் சென்னையில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் பின்னர், அவரின் பந்து வீச்சு முறையில் தவறில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.