கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்வதில் தவறில்லை : அமைச்சர் சரத் பொன்சேகா

ஊழல் மோசடி மற்றும் மனித கொலையுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்ய வேண்டும். எனவே முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்வதில் தவறில்லை என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர்  கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்யபடவுள்ளதாக கூறப்படுகின்றது. அது தவறான விடயமல்ல.

காரணம் பண மோசடி ஈடுபட்டவர்களையும், திருட்டு பணத்தில் தாய் தந்தையருக்கு சமாதி அமைத்தவர்களையும், பணத்தை மோசடி செய்தவர்களையும் மனித கொலையுடன் தொடர்பு பட்டவர்கள்கள் மீது வழக்கு தொடரவேண்டும். 

எவ்வாறாயினும் இன்று பாதுகப்பு தரப்பிக்களுக்கு உள்ளும் கூட மஹிந்த ராஜபக்ஷ குழுக்களை பாதுகாக்கும் ஒரு குழு இருக்கின்றது. அவர்களை முதலில் திருத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.