ஜனாதிபதிக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ள ஆறுமுகம் தொண்டமான்…

நுவரெலியா மாவட்ட இணைத்தலைவர் பதவியில் இருந்து ஆறுமுகம் தொண்டமான் இராஜினாமா செய்துள்ளார்.

இவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹட்டன் நகரின் குப்பை பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய காரணத்தினாலேயே தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.