மக்கள் ஆதரவைக்கொண்டு தொடர்ந்து வடமாகாணத்தை ஆட்சி செய்வேன்: சீ.வி.விக்னேஸ்வரன் உறுதி

உங்கள் ஆதரவு இருக்கும் வரை என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட போராட்டம் பேரணியாக முதலமைச்சரின் அலுவலகத்திற்கு சென்றது. இதன்போது அலுவலகத்திலிருந்த முதலமைச்சர் போராட்டக்காரர்களை சந்தித்து அவர்களுக்கு கருத்து கூறும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

மேலும், உங்கள் ஆதரவு எனக்கு போதும், நீங்கள் எனக்கு கொடுக்கும் ஆதரவைக்கொண்டு தொடர்ந்து வடமாகாணத்தை ஆட்சி செய்வேன்.எனக்கு பின்னால் நீங்கள் இருப்பதை பார்க்கும் போது நான் செல்லும் பாதை சரி என்று எனக்கு தோன்றுகின்றது.உங்கள் நலன் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் நான் எடுப்பேன் என்பதை இங்கு உறுதிபட தெரிவிக்கின்றேன். எனக் கூறினார்.

தொடர்ந்து சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் உரை நிகழ்த்துகின்றமை குறிப்பிடத்தக்கது.