காத்தான்குடி பிரதேச முஸ்லிம் ஊடகவியலாளர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் விஷேட சந்திப்பு- ஓடியோ இணைப்பு!

DSC04708_Fotor

பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று 24 ஞாயிற்றுக்கிழமை மதியம் காத்தான்குடி கயா பேக்கரி அன்ட் ரெஸ்டுரெண்டில் வைத்து விஷேடமாக சந்தித்து கலந்துரையாடினார்.
இதில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள ஊடகவியலாளர்கள் , எஸ்.எம்.எஸ்.குறுஞ் செய்தியாளர்கள்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் சுபைர் ,முன்னாள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் அஸ்பர்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
DSC04718_Fotor
இதன் போது ஊடகவியலார்களினால் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்விடம் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் கேள்வி கேட்;கப்பட்டு அதற்கு பதிலளிக்கப்பட்டது.
இது தொடர்பான முழுமையான செவ்வி இத்துடன் mp-3 ஓடியோ வடிவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.