பிரதமர் ரணில்; இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பு இன்று காலை புதுடெல்லியில் உள்ள தாஜ் பெலஸ் விடுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன் போது முக்கிய பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பை தொடர்ந்து, இந்திய மத்திய அமைச்சரான நிதின் கட்கரி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.