எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும்- கூட்டு எதிர்க்கட்சி நம்பிக்கை

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என எதிர்பார்ப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

பண்டாரகம பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முக்கியமான முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டு இந்த கால பகுதியில் அவர்கள் பொறுமையுடன் செயற்பட்டு வருகின்றனர் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.