ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கெதிராக ஆர்ப்பாட்டம்

சுமார் 26 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிலங்கையில் புத்தளம் உட்பட பெரும்பாலான பிரதேசங்களில் அகதிகளாக அவல வாழ்வு வாழ்ந்து மீண்டும்    தமது பிரதேசத்தில் அமைதி ஏற்பட்டதனால் சுதந்திரக்காற்றை சுவாசிக்க வந்த முசலி மக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் புதிய வர்த்தமானி பிரகடனம் அவர்களின் சுயாதீன நடவடிக்கைகளை முடக்கியுள்ளது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் முசலி மக்களால் ஜூம்ஆ தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது, இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கு கொண்டனர் .