சூனியம் செய்யும் சாணக்கியம் – (பேயோட்டிய பெருந்தலைவன் -பகுதி 3 )

குமாரிக் கூரே ஹக்கீமின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட பாதிப்பைச் செலுத்துயிருக்கிறார் என்பதைச் சிந்திக்கும்போது ஏமாற்றமும்,பயமும் மேலிடுகிறது.
எமது தலைவனா இப்படி என்ற ஏமாற்றம் அது.இவர் இப்படி இருந்தால் எமது சமூகம் எங்கு போய் நிற்குமோ என்ற பயம் அது.

குமாரி கூரே ஹக்கீமுக்கு அறிமுகமாகியதன் பின்னர் ஹக்கீமின் தனிப்பட்ட வாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையும் குமாரி மயமாகத்தான் இருந்தது. வாக்களித்த மக்களோ தலைவர் எமது உரிமைகளை வென்றுதரப் போராடுகிறார் என்று எதிர்பார்த்தவர்களாகக் காத்திருந்தார்கள்.ஆனால் ஹக்கீமோ குமாரியின் பேயை விரட்டப் போராடிக்கொண்டிருந்தார்.

பள்ளிகள் பற்றி எரியும்போது இறைவா எங்களை அழிக்கிறார்கள் என்று இறைவனிடம் இறைஞ்சிவிட்டு அவனின் உதவி ஹக்கீமின் மூலமாக வரும் என்று எமது மக்கள் இறைஞ்சிய கையை இறக்காமல்,கண்களை ஹக்கீமின் பக்கம் வைத்துக் கொண்டு காத்திருந்தார்கள். ஆனால் ஹக்கீமோ அவரை பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கும் குமாரியின் சனியை விரட்ட சூனியம் செய்து கொண்டிருந்தார்.

எங்கள் தலைவன் எங்களுக்காகத் துடித்தெழும்புவான் என்று மக்கள் காத்துக்கொண்டே இருந்தார்கள்.ஆனால் அரசாங்கம் ‘உஷ்’ பொத்திக் கொண்டு பொட்டிப்பாம்பாய்க் கிட இல்லையேல் உன் வீடியோவை வெளியிடுவோம் என்று அனைவரும் மிரட்டிக்கொண்டிருந்தார்கள்.எப்படி எழும்புவார் தலைவர் எங்களுக்காக.

முஸ்லீம் காங்கிறசின் தலைமைப் பதவியை ஏற்ற காலத்தில் இருந்து இதுதான் ஹக்கீமின் அரசியல் வாழ்க்கையாக இருந்து வருகிறது.குமாரி உயிரோடு இருக்கும் போது குமாரியை வைத்து மிரட்டுவது,குமாரி இறந்ததன் பின் குமாரியின் மரணத்தை வைத்து மிரட்டுவது,அதை விட்டு ஓட ஹக்கீம் உம்மத்தை விற்பது,பின்னர் குமாரியின் ஆவியை விரட்ட ஓடித்திரிவது,குமாரியைப் பிரிக்க சூனியம் செய்வது.தனது பிரச்சினைக்கே விடை தெரியாமல் தத்தளிக்கும் மனிதர் எப்படி எமது பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவருவார்?
குமாரியின் ஆவியை விரட்ட தெடிமுண்ட தெய்வத்திடம் உதவி தேடிப்போன தலைவர் கதையை நான் சென்ற தொடரில் கூறியிருந்தேன்.இது அகீதா ரீதியாக ஹக்கீம் பிறழ்ந்து போன இன்னொரு கதையை இங்கே கூறுகிறேன்.

குமாரியை ஏமாற்றிய ஹக்கீம் குமாரியை விட்டு எப்படி விலகுவது என்று யோசித்துக்கொண்டிருந்தார்.குமாரி தன்னைச் சுற்றிச் சுற்றி வருவதிலிருந்து குமாரியை நிறுத்தவேண்டும்.அதற்கு ஒரு வழி தன்னை மனதார நேசிக்கும் குமாரியை தன்னை வெறுக்கவைக்கவேண்டும். எப்படிச் செய்வது?

குமாரியின் விவகாரத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து ஹக்கீம் பலரை கலந்துரையாடினார். தலைவருக்கு சூப்பர ஐடியா கொடுத்தவர் ஜாவத்தையில் வசிக்கும் ஒரு முஸ்லிம் பெண்.அவருடைய தந்தை கல்முனையைச் சேர்ந்தவர்.அவர் தனிப்பட்ட ஒருவர் என்பதால் அவருடைய பெயர் இங்கு தவிர்க்கப்படுகிறது.
‘லொகு சீயாவிடம் செல்லுங்கள் என்றார்’’ அந்தப் பெண்.

படத்தில் இருப்பவர் லொகு சீயாவும் அவரது இரண்டு மகன்களான பொடி சீயா மற்றும் புஞ்சி சீயா ஆகியோர்.ராகமையில் தலகொல்லவில் நெலும் மாவத்தையில் இருக்கும் ஒரு கோயில்தான் ‘றாகம தேவாலய’ என்பது.அந்தப் பன்ஸலயின் பிரதான பூசாரியின் பெயர் லொகு சீயா.இணைக்கப்பட்ட படஹ்தின் நடுஅவரின் மகனின் பெயர் பொடி சீயா.60 வகையான தீய ஆவிகளை தன்னுள் வைத்திருப்பவர்தான் லொகு சீயா என நம்பப்படுகிறது.சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் மரணித்த அப்புஹாமி சீயா என்வரின் ஆவி லொகு சீயாவிடம் புகுந்திருக்கிறது என்று சிங்களவர்க்ள் நம்பினார்கள்.பல வருடங்களுக்கு முன்னர் மரணித்த சண்டி சீயாவின் ஆவியும் லொகு சீயாவிடம் இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது.

கெட்ட ஆவிகளின் உதவியுடன் சூனியங்களை வெட்டுதல்,வைத்தியம் செய்தல்,சூனியத்தின் மூலம் உறவுகளைப் பிரித்தல் போன்ற பல விடயங்களில் பெயர் போனவர்தான் லொகு சீயா.முட்டைகளை வைத்துத்தான் இவரின் சூனியச் செயற்பாடுகள் எல்லாம் இடம்பெறும். பாதிக்கப்பட்டவரிடம் இருந்து முட்டைகளைப் பெற்று அவற்றை ஒரு சட்டிக்குள் வெள்ளைச் சீலையால் மூன்றூ நாட்களுக்கு மூடிவைத்து மந்திரித்து சூனியம் செய்வதுதான் லொகு சீயாவின் பிரபலமான செய்வினை முறை.

தலைவர் குமாரியைத் தன்னிடம் இருந்து பிரிக்க சூனியம் செய்வதற்காக லொகு சீயாவை நாடினார்.விவரங்களை அறிந்து கொண்ட லொகு சீயா முதல் நாள் பத்து வெள்ளை நிற முட்டைகளைக் கொண்டுவருமாறு ஹக்கீமிடம் கூறினார்.முட்டைகளின் மீது ஓதி ஊதிய வண்ணம் ஹக்கீமும்,லொகு சீயாவும் அவரின் கட்சியைச் சேர்ந்த இருவரும் அருகில் இருக்கும் கடற்கரைக்குச் சென்றனர். இனம் புரியாத பாஷையில் ஓதி ஒவ்வொரு முட்டைகளாகக் கடலில் எறிந்தார் லொகு சீயா.

மறு நாள் இன்னொரு பத்து முட்டைகளோடு தனது வீட்டிற்கு வரச்சொன்னார் லொகு சீயா.அவை வெள்ளை நிறமாக இருக்கவேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். ஹக்கீம் சென்றார்.வாங்கிய பத்து முட்டைகளில் ஒரு முட்டை இளம் சிவப்பாக இருந்தது என்று அந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் என்னிடம் விபரித்தார். பத்து முட்டைகளையும் எடுத்துக்கொண்டு பூஜையறைக்குள் நுழைந்த லொக்கு சீயா மந்திரித்துவிட்டு தலைவிரி கோலமாக தன் வீட்டு முன்றலுக்கு வந்தார்.அங்கு ஹக்கீம் கைகளைக் கட்டிய வண்ணம் நின்றிருந்தார்.ஒவ்வொரு முட்டையாக ஹக்கீமை உடைக்கச் சொன்னார் லொக்கு சீயா.முட்டையை உடைத்ததும் அவை அனைத்தும் கூழ் முட்டைகளாக இருந்தன. புதிதாக வாங்கிய முட்டைகள் கூழ் முட்டைகளாக இருப்பதை அகல விரிந்த கண்களோடு ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ஹக்கீம்.குமாரியின் உறவு இனி இல்லாமல் போய்விடும் என்று அவர் நிம்மதியடைந்தார்.

இது தலைவரின் ராகம தேவாலயக் கதை.அடுத்த கதை தலைவரின் எண்கணிதம் மீதான நம்பிக்கை சார்ந்தது.

ஹக்கீம் எண்கணிதத்தில் மிகவும் நம்பிக்கை கொண்டவர்.ஹக்கீம் பிறந்தது 13ம் திகதி.எண்கணித அடிப்படையில் 13ம் இலக்கம் மிகவும் துரதிஷ்டமான இலக்கமாக கணிக்கப்படுகிறது.எண் கணிதத்தில் கர்ம இலக்கங்களாக நம்பப்படுபவை 13,14.16,19 ஆகிய இலக்கங்கள்.ஹக்கீம் அவர்கள் பிறந்தது 13ம் திகதி என்பதனால் 13ம் திகதியில் அவர் எந்தவிதமான நல்ல காரியங்களையும் ஆரம்பிக்கமாட்டார்.எந்த விதமான ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடமாட்டார்.கட்சிக் கூட்டங்கள் எதுவும் 13ம் திகதியில் வைக்கமாட்டார். இதனை யாரும் பரிசோதிக்க விரும்பினால் 13ம் திகதி ஏதாவது காங்கிறஸ் கூட்டங்கள் நடை பெற்றிருக்கிறதா என்பதை தேடிப்பார்க்கலாம்.

நான் இங்கு கூறுபவைகள் அனைத்தும் நேரடிச்சாட்சியங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள்.ரவூப் ஹகீம் யார் யாரோடு சென்றார் என்று பெயர் முதல் இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். முடியுமாக இருந்தால் ரவூப் ஹக்கீமோ அல்லது அவரின் அடிவருடிகளோ இது இட்டுக்கட்டப்பட்டது.இவ்வாறு தலைவர் செய்யவில்லை என்று முடியுமானால் மறுக்கட்டும்.

எண் கணிதணிதத்தை வைத்து நல்ல சகுனங்கள்,கெட்ட சகுனங்கள் தீர்மானிப்பது இணைவைப்பு என்று நபிகளார் கூறியிருக்கிறார்கள்.’தியாறா( கெட்ட சகுனங்கள் பார்ப்பது) இணைவைப்பாகும் என நபிகளார் குறிப்பிடுகின்றார்கள்.

யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு
அருளப்பட்ட மார்க்கத்தை அவன் நிராகரித்து விட்டான் என்பது முஸ்னத் அஹ்மதில் வரும் நபிமொழி.

நன்றாக ஞாபகம் இருக்கட்டும். விபச்சாரம் செய்தவர்,போயோட்டியவர்,சூனியம் செய்தவர்,எண் கணிதம் பார்ப்பவர் எல்லாம் முஸ்லீம்களின் அரசியல் உரிமைகளை மீட்டுத்தரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிறசின் தேசியத்தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

அகீதாவே சரியில்லாத இப்படிப்பட்டவர்தான் எமக்கு அரசியல் விடுதலை வாங்கித்தருவார் என்று கண்மூடித்தனமான நாங்கள் நம்பியிருக்கிறோம்.இந்த அகீதா சரியில்லாத ஒருவர்தான் அல் குர்ஆனையும், சுன்னாவையும் யாப்பாகக் கொண்ட கட்சியின் தலைவராக இருக்கிறார்.அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட சமுதாயம் எப்படி வெற்றி பெறும்.யோசித்துப்பாருங்கள். (தொடரும்)

RAAZI MUHAMMADH JAABIR