அமெரிக்காவின் மிக முக்கிய போர்க்கப்பல்களில் ஒன்று கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை

அமெரிக்காவின் மிக முக்கிய போர்க்கப்பல்களில் ஒன்று கொழும்புத் துறைமுகத்திற்கு இன்று வருகை தந்துள்ளது.

அமெரிக்க கடற்படையின் கொம்ஸ்டோக் என்றழைக்கப்படும் போர்க்கப்பலே பயிற்சி நடவடிக்கைகளின் பொருட்டு இன்று கொழும்பை வந்தடைந்திருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.

கடற்படை சம்பிரதாயங்களின் பிரகாரம் குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினரின் மரியாதை வரவேற்பு வழங்கப்பட்டதுடன், இரு நாட்டுக் கடற்படை அதிகாரிகளின் சிநேக பூர்வ கலந்துரையாடல் ஒன்றும் கப்பலில் நடைபெற்றுள்ளது,

இலங்கைக் கடற்பரப்பில் அமெரிக்காவின் கொம்ஸ்டோக் போர்க்கப்பல் நான்கு நாட்கள் தரித்து நிற்கவுள்ளதுடன், இக்காலப்பகுதியில் இலங்கைக் கடற்படையினரின் ஏற்பாட்டில் பல்வேறு வைபவங்களில் கலந்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.