விமல் வீரவன்சவின் உடல் நிலையில் குணப்படுத்த முடியாத அளவில் பாதிப்பு ஏற்படலாம் : மருத்துவர்கள்

விமல் வீரவங்ச தொடர்ந்தும் நீரை மாத்திரம் பருகி உடல் நிலைமையை பேண முயற்சித்தால், சிறுநீரகம் மற்றும் குடல் பகுதிகளில் குணப்படுத்த முடியாத அளவில் பாதிப்பு ஏற்படலாம் என சிறைச்சாலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வீரவங்சவின் உடல் நலம் குறித்து அறிய சிறைச்சாலை வைத்தியசாலைக்கு சென்று கூட்டு எதிர்க்கட்சியின் அரசியல்வாதிகளிடம் மருத்துவர்கள் இதனை கூறியுள்ளனர். 

நீரை மாத்திரம் பருகி சுமார் 7 தினங்கள் உடல் நிலைமையை பேண முடியும். எனினும் அதன் பின்னர் ஆபத்தான நிலைமையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

விமல் வீரவங்ச தற்போது மெல்லிய மெதுவாக பேசுவதாக அவரை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளார்.