இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் பதவி விலகியுள்ளார்..

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த ஷசாங் மனோகர் பதவி விலகியுள்ளார்.   கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதத்தில்  இருந்து ஷசாங் மனோகர் சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றிருந்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக  ஷசாங் மனோகர்  பதவி விலகுவதாகவும் அடுத்த தலைவரை நியமிக்கும் வரை தலைமைச் செயலதிகாரி கூடுதலாக தலைவர் பொறுப்பை கவனிப்பார் எனவும் சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

59 வயதாகும்  ஷசாங் மனோகர்  தனது பதவிவிலகல் குறித்து ஐசிசி தலைமை செயலதிகாரிக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கபடப்டுள்ளது. மனோகரின் பதவிக் காலம் இன்னும் 2 வருடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.