கண்ணீரில் கிண்ணியா

Mohamed Nizous

கண்ணீர் வருகிறது
கிண்ணியாவின் செய்திகளால்
டெங்கெனும் கொடிய நோயால்
சங்கடத்தில் மாட்டி நிற்கும்
அங்குள்ள மக்களுக்காய்
இங்குள்ளம் தவிக்கின்றது.

சின்னஞ் சிறுசுகளும்
சீவனுக்காய் போராட
என்ன செய்வதென்று 
எல்லோரும் ஏங்குகிறார்.
கரங்களை ஏந்துகிறார்
கண்ணீரில் நீந்துகிறார்.
இருக்கின்ற பிள்ளைகளை
இறைவா நீ காப்பாயென
உருக்கமாய் வேண்டுகிறார்
உள்ளுக்குள் நடுங்கிறார்.

பிள்ளையின் ரத்தத்தில்
பிலேட் குறையுதென்று
சொல்லுகின்ற போதே
உள்ளம் உடைந்து போகும்
படிப்படியாய் குறைந்து
பாலகன் போராட
அடிப்படை புரிந்து போக
அடி மனம் அழும் தனியாய்.

ஆண்டவனின் சோதனையில்
மாண்டவர்க்கு மன்னிப்பும்
நோய்கள் நீங்கவும்
நுளம்புகள் அழியவும்
இரவுத் தொழுகைகளில்
இறைவனிடம் பிரார்த்திப்போம்