டெங்கு..!!

Mohamed Nizous

“நீ” எனும் ஓர் எழுத்து ஜீவன்

‘நீர்” எனும் 2 எழுத்தை
நிலத்தில் தேக்க

‘டெங்கு’ எனும் 
3 எழுத்து 
முஷோலினியை

‘நுளம்பு” எனும்
4 எழுத்து காவி வரும். 

‘காய்ச்சல்’ எனும் 
5 எழுத்து மூச்சை நெருக்க

‘ஆஸ்பத்திரி’ எனும்
6 எழுத்து அடைக்கலம் கொடுக்கும்.

‘இரத்த மாதிரி’ எனும்
7 எழுத்து இடியாய் இடிக்க

‘இறைவா காப்பாற்று’ எனும்
8 எழுத்தில் இதயம் துடிக்கும்.

‘ஒன்றும் செய்ய ஏலா’ எனும்
9 எழுத்தில் உயிர் அடங்கும்.

இல்லை

‘குணமடைந்து விட்டார்’ எனும்
10 எழுத்தில் பதற்றம் தணியும்.

பூச்சியமாகும்
பூத்திருந்த வாழ்வு

நீ எனும்
ஓரெழுத்து ஜீவன்
நீரை நினைத்தபடி தேக்கியதால்….!