ரவூப் ஹக்கீமின் வருகையை எதிர்த்து நிந்தவூரில் டயர்கள் எரிப்பு

மீரா அலி ரஜாய்

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் நிந்தவூர் வருகைக்கு எதிர்ப்புத் நிந்தவூர் பிரதேச சபைக்கு முன்னால் மக்கள் டயர்களை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருப்பதாக அங்கிருக்கும் லங்கா புரண்ட் இணையத்தளத்தின் விசேட செய்தியாளர் எமக்கு தெரிவித்தார் .

முஸ்லீம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலி அவர்களுக்கு ரவூப் அவர்கள் செய்த துரோகத்தனத்திற்கு மக்கள் இவ்வாறு தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கின்றார்கள் என்றும் அறியக்கிடைக்கின்றது.