அதாஉல்லாவின் மீது பழி சுமத்த உங்களுக்கு 20 பேட்சஸ் காணிதான் கிடைத்ததா?

அஸ்மி அப்துல் கபூர் 

 

  முஸ்லீம் அரசியல் தலைமைகளின் கூட்டுசதிகளும் வங்குரோத்தும் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்பட்டு தெளிவு நிலை காணுகின்ற சூழலில் 27.02.2017 திகதிய அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் திட்ட மிட்ட முறையில் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட பிரதேச செயலக பின் புறம் உள்ள காணி தொடர்பான குழப்பகரமான நிகழ்வை தெளிவு படுத்த வேண்டிய தேவை எமக்கிருப்பதாக உணர்ந்த வகையில் இவர்கள் குறிப்பிடுகின்ற காணியின் அளவு 20 பேட்சஸ் AP/AP/MW 26 எனும் காணி உறுதி பத்திரம்(LDO பேர்மிட்) இலக்கத்தை கொண்டது.


1978ம் மாண்டு இப்பகுதியில் குடியேறிய குறித்த காணியின் பெயருடைய பெண் ஒருவரின் தந்தைக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் பேர்மிட் 1996ம் மாண்டு வழங்கப்பட்டிருக்கிறது 

 

அதன் பின்னர் 2006ம் மாண்டு மேற் குறித்த இலக்கத்தை உடைய காணி உறுதிப்பத்திரம்(LDO பேர்மிட்) வழங்கப்பட்டிருக்கிறதுஇந்த விடயத்தை முக்கியமாக கொண்டு வந்து இவர்கள் பேச விளைவதென்ன?
அந்தப் பெண்முன்னாள்அமைச்சர் அதாஉல்லாவின் மூத்த சகோதரியினுடைய மகள் என்கின்ற காரணத்தை தவிர வேறெதையும் காணக்கூடியதாக இல்லை. 

 

1 .கடந்த முப்பது வருடங்களாக அரசியல் அதிகாரம் அதாஉல்லா என்பவர் கொண்டிருக்கும் நிலையில் அவர் காணி அபகரிக்க இந்த 20 பேட்ச் காணிதான் அக்கரைப்பற்றில் கிடைத்ததா?

02.சமுகத்தையும் தாய்மாரின் கண்ணீரையும் மொத்தமாக அடகு வைத்த தலைவர்கள் மத்தியில் இவர் மீது பழி போட நினைப்பவர் நல்லாட்சிக்காக 300மில்லியன் பெற்றவரிடம் கண்டியில் வைத்து எவ்வளவு பெற்றார்.

03.அரசாங்கத்தில் அனுமதிவழங்கப் பட்ட காணியில் குடியிருப்பாளன் வீடு நிர்மாணித்து சுமார் பத்து வருடம் கடந்த நிலையில் நேற்று வந்த பிரதேச செயலாளர் அரசியல் வாதிகளுக்காக பேச விளைவது தொடர்பில் தன்னை அவர் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் .

04.அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருக்கின்ற உப தபாலக வீதியிலிருந்து தைக்கா நகர் மையவாடி வரை உள்ள காணிகள் எத்தனை காலத்துக்குள் மக்கள் பாவனைக்குட்படுத்தினார்கள்.அரசு எப்போது காணிபத்திரம் வழங்கியது என பிரதேச செயலாளர் முதலில் அறிய வேண்டும். 

05.இருக்கின்ற எல்லோரையும் எழுப்பி விட்டு மகளீர் என்னையோ கொமிசனுக்கு கட்ட வேண்டுமா?

06.ஹிறா பாலர்பாடசாலை பதியுதீன் மெளமூத் பாடசாலை போன்றவை கூட இவ்வாறான நிலம் தேவைப்பட்ட போது குறித்த மக்களிடம் பணம் கொடுத்து வாங்கப்பட்டதை குறித்த நபர்கள் அறிவார்களா?

07.கடந்த இரண்டு ஆண்டுக்குள் இங்கு காணி அபகரிப்பு தொடர்பில் குறிப்பிடும் இவர்கள் அக்கரைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் அரச காணி ஒன்றை கபளீகரம் செய்து வைத்திருப்பதை நிரூபிக்க வேண்டுமா?

அதாஉல்லாவின் மீது பழி போட உங்களால் 20 பேட்சஸ் காணிதான் கிடைத்ததா?  உங்கள் தலைவர்கள் கோடிக்கணக்கில் சமுகத்தை விற்று பிழைப்பதை ஒரு புறம் ஒதுக்கி வேலையில்லாத நாசுவன் நாயை கட்டி சேரச்சானாம். என்கிற விதத்தில் செயற்படுவது உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பணத்தின் அடிப்படையில் என்பதை நாம் புரியாமலில்லை.

இது தொடர்பில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளரின் போக்கு தான் முஸ்லீம் காங்கிரஸ்காரர் என்பதை நிரூபிப்பதாக இருக்கிறது. இவர் அரச அதிகாரி என்கின்ற வகையில் இவரின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் நாம் எதுவும் பேசமால் இருப்பதை இவர் சாதகமாக பயன்படுத்த நினைப்பது மிகப் பெரிய முட்டாள்தனம் என்பதை விரைவில் உணர்ந்து கொள்வார்.