குண்டு வைத்த கொடியவர்கள்

Mohamed Nizous

குண்டு வைத்தவரை
கண்டு பிடிக்க வேண்டும்
கண்ட துண்டமாக்கி
முண்டமாய் விட வேண்டும்

பள்ளியில் தொழுதவரை
பிள்ளைகளைப் பெரியோரைக்
கொல்லும் அயோக்கியர்கள்
இல்லாது ஒழிய வேண்டும்

ஆயுதம் ஏந்தவில்லை
தீய செயல் செய்யவில்லை
தூயவனை வணங்கியோரை
பேய் நாய்கள் கொன்றது ஏன்?

அநியாயம் செய்தவர்கள்
அக்கிரமம் புரிந்தவர்கள்
துனியாவில் கேவலமாய்த்
தொலைந்ததைக் கண்டுள்ளோம்

சரியான உன் தீர்ப்பை
சதிகாரக் கும்பலுக்கு
விரைவாக இறக்கி வை
வேதனையில் கேட்கின்றோம்

உயிர் இழந்த மக்களுக்கு
உயர் பதவி கொடுத்திடுவார்
துயரோடு கேட்கின்றோம்
தூய ரஹ்மானே!