தவத்தின், பஷீர் மீதான குற்றச் சாட்டில் ஹக்கீம் குற்றவாளி தான் என்பதை ஏற்றுக்கொள்கிறார்

 

 நாம் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் நாம் செய்கின்ற சில விடயங்கள் எமது மனங்களில் புதைந்து கிடக்கின்ற உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்திவிடும்.அந்த வகையில் மாகாண சபை உறுப்பினர் தவத்தின் பஷீர் மீதான குற்றச் சாட்டில் ஹக்கீம் குற்றவாளி தான் என்பதை ஏற்றுக்கொள்கிறார்.

அவர் இன்று “எப்போது பிழைத்திருப்பார் ரவூப் ஹக்கீம்” எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வரைந்திருந்தார்.பிழைத்திருப்பார் என்பது இறந்த காலம்.அப்படியானால் ஹக்கீம் பிழைக்கவில்லை.இத் தலைப்பில் ஒரு விடயம் தெளிவாகிறது.ஹக்கீம் பஷீரின் ஆட்டத்தில் அகப்பட்டுக்கொண்டார் என்பதாகும்.

அவர் தனது கட்டுரையில் ஹக்கீம் பஷீர் நினைத்த படி நடந்திருந்தால் இப்படி செய்திருக்க மாட்டார் என கூறுகிறார்.அப்படியானால் பஷீரிடம் ஹக்கீமின் பிடி உள்ளது என்பது தானே பொருள்.

சகோதரர் தவம் அவர்களே!

பஷீர் தான் குற்றவாளி என அவரே ஒப்புக்கொண்ட பின்பும் அவர் குற்றவாளியென நீங்கள் நிரூபிக்க வருவது சிரிப்பாக இருக்கின்றது.

இப்றாஹீம் மன்சூர்,கிண்ணியா