கணக்காய்வாளர் எந்தவொரு அமைச்சருக்கும் பொறுப்புக்கூறவேண்டிய அவசியம் இல்லை:லக்ஸ்மன் யாபா அபேவர்தன

கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கு தாம் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கணக்காய்வாள் எந்தவொரு அமைச்சருக்கும் பொறுப்புக்கூறவேண்டிய அவசியம் இல்லை.

எதிர்க்கட்சியில் இருக்கும்போது சுயாதீன அதிகாரங்கள் பற்றி பேசும் சிலர், அரசாங்கத்தில் இருக்கும்போது சுயாதீன அதிகாரம் கொண்டவர்களை விமர்சிக்கிறார்கள் என்றும் இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா தெரிவித்துள்ளார்.