அனுராதபுர மாவட்ட அபிவிருத்திக்காக சுமார் 500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது : பிரதமர்

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தேசிய பாரம்பரிய இடங்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

பிரதமர் தந்திரிமலை ராஜ மஹா விஹாரைக்கு இன்று காலை சென்றார்.

இந்த நிலையில், தந்திரிமலை ராஜ மஹா விஹாரையின் விகாரதிபதியை சந்தித்த போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரம் மாவட்ட அபிவிருத்திக்காக சுமார் 500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.