யாழ்ப்பாணம் கொக்குவில்லில் உள்ள பல்கலைக்கழகத்தின் புதிய பெண்கள் விடுதியில் தீ

ஏ.எஸ்.எம்.ஜாவித்

இன்று (26) மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் கொக்குவில்லில் உள்ள பல்கலைக்கழகத்தின் புதிய பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீயினால் ஒரு அறை முற்றாக எரிந்து நாசமானது. இதன்போது மாணவர்களின் அணைத்துப் பொருட்களும் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயினை பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். தீ ஏற்பட்டதற்கான காரணத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மின் ஒழுக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.