இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷண் விருது

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2016-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. 

பத்ம பூஷண் விருது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.