எல்லை நிர்­ணய அறிக்கையை ஆராயும் கூட்டம் பாராளுமன்றத்தில் இன்று

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்கை தொடர்­பிலும் அபி­வி­ருத்தி விசேட ஏற்­பா­டு­க­ளுக்­கான விசேட சட்­ட­மூலம் குறித்தும் ஆராய்­வ­தற்கு கட்சித் தலை­வர்கள் கூட்டம் இன்று பாரா­ளு­மன்­றத்தில் கூட­வுள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கூட­வுள்ள கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் அனைத்து கட்சித் தலை­வர்­களும் கலந்து கொள்­ள­வுள்­ளனர். அத்­துடன் இதன்­போது முக்­கிய தீர்­மா­னங்கள் பல எடுக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சுவிட்­ஸர்­லாந்­திற்கு விஜயம் செய்­வ­தற்கு முன்னர் கட்சித் தலை­வர்கள் பாரா­ளு­மன்­றத்தில் கூடி ஆராய்ந்­தனர்.

இதன்­போது புதிய முறை­மையின் பிர­காரம் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என அக்­கூட்­டத்தில் ஏக­ம­ன­தாக தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. 

அத்­துடன் அண்­மையில் எல்லை நிர்­ணய அறிக்கை உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண அமைச்சர் பைசர் முஸ்­த­பா­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது. இதன்­படி குறித்த அறிக்கை இந்த மாத இறு­திக்குள் வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. எனினும் இந்த அறிக்கை தொடர்பில் சிறு­பான்மை கட்­சிகள் தமது எதிர்ப்பை வெளி­யிட்டு வரு­கின்­றன.

இதன்­மூலம் சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தாக சிறு­பான்மை கட்­சிகள் ஒன்று கூடித் தீர்­மானம் எடுத்­தி­ருந்­தன.

இந்­நி­லையில் இது தொடர்பில் இன்று பாரா­ளு­மன்­றத்தில் கூட­வுள்ள கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் பர­வ­லாக ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. 
மேலும் அபி­வி­ருத்தி விசேட ஏற்­பா­டு­க­ளுக்­கான சட்­ட­மூலம் தொடர்பில் எழுந்­துள்ள பிரச்­சி­னைகள் குறித்து கடந்த கட்சித் தலை­வர்கள் கூட்டத்தின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களை அறிவுறுத்தினார்.

எனினும் இன்றைய கூட்டத்தின் போதும் இதுகுறித்து ஆராயப்படவுள்ளது.