தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆணை சரிவடைந்து கொண்டிருப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு !

தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆணை சரிவடைந்து கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார். 

2001ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதற்கான காரணம் மக்கள் எதிர்பார்ப்புக்கு எதிராக செயற்பட்டமையே என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ராமஞ்ய பீடத்தின் மாகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

தான் மீண்டும் அரசியலில் முன்னோக்கிச் செல்வதாக திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறினார்.