மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர் நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் மஹிந்த அமரவீர வை அமைச்சர் ரிஷாட் சந்தித்து பேச்சு

மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக எதிர் நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர வை மாளிகாவத்தையிலுள்ள அவரது அமைச்சு அலுவலகத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்சந்தித்து பேச்சு நடத்தினார் .இந்த சந்திப்பில் மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கு பற்றினர் .