அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்ள லசந்த விக்­ர­ம­துங்­கவின் மகள் விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு வாக்கு மூலம்

சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் படு­கொ­லைக்கு முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்ள லசந்த விக்­ர­ம­துங்­கவின் மகள் விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு வாக்கு மூலம் அளித்­துள்ளார்.

கொலை இடம்­பெற சில தினங்­க­ளுக்கு முன்னர் தனது தந்தை தன்­னிடம் தெரி­வித்த விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தியே அவுஸ்­தி­ரே­லி­யாவில் வைத்து அவர் இவ்­வாறு தமது விசா­ர­ணை­யா­ளர்­க­ளிடம் வாக்கு மூலம் வழங்­கி­ய­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ரணை அதி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த டி சில்வா கல்­கிசை நீதிவான் நீதி­மன்­றுக்கு நேற்று அறி­வித்தார்.

ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­ர­ம­துங்க படு­கொலை வழக்கு நேற்­றைய தினம் கல்­கிசை பிர­தான நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்­னி­லையில் இடம்­பெற்­றது. 

 இந் நிலையில் மன்­றுக்கு மேல­திக விசா­ரணை அறிக்­கை­யுடன் முன்­னி­லை­யான விசா­ரணை அதி­கா­ரி­யான சிறப்பு விசா­ர­ணை­யாளர் பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த டி சில்வா, அவ்­வ­றிக்­கையை நீதிவான் மொஹம்மட் மிஹா­லுக்கு சமர்ப்­பித்து பின் வரு­மாறு கருத்­து­களை முன் வைத்தார்.

 நாம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்ள, லசந்த விக்­ர­ம­துங்­கவின் மக­ளிடம் அங்கு சென்று வாக்கு மூலம் ஒன்­றினைப் பதிவு செய்தோம். அதில், தனது தந்தை இறப்­ப­தற்கு சில தினங்­க­ளுக்கு முன்னர் கூறிய விட­யங்­களை அவர் வெளிப்­ப­டுத்­தினார்.

அப்­போது தனது தந்தை மிக் விமான கொள்­வ­னவு தொடர்பில் தனக்கு ஆபத்து வரலாம் என தெரி­வித்­த­தா­கவும் அவ்­வாறு ஆபத்து ஏற்­படின் அதற்கு அப்­போ­தைய பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவே பொறுப்புக் கூற­வேண்டும் என சுட்­டிக்­காட்­டி­ய­தா­கவும் தெரி­வித்தார்.

அதன் பின்னர் சந்தேக நபர் சார்பிலோ பாதிக்கப்பட்ட தரப்பு சார்பிலோ எந்த கருத்துக்களும் முன் வைக்கப்படாத நிலையில் வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிவான் மொஹம்மட் மிஹால் அறிவித்தார்.